அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். கோடைக் காலத்தில் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக்கூடியது நுங்கு. தாகத்தை தணிப்பது மட்டுமல்ல; பல நோய்களை தடுக்கவும் திறன் உடையது நுங்கு.
எது சாப்பிட்டாலும், சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் ஏற்படும். சிலருக்கு வாயில், நாக்கில் புண் அடிக்கடி வரும். இப்படி பிரச்னை இருப்பவர்கள், இரண்டு நுங்கின் சதையை தனியே எடுத்து, மிக்சியில் அரைத்து, ஒரு டம்ளர் தேங்காய் பாலில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் குடிக்கலாம். வாய், நாக்குப் புண் நான்கைந்து நாட்களில் குணமாகி விடும். அல்சரின் அறிகுறிகள் நாளடைவில் குறையவும் வாய்ப்பு உள்ளது. மார்பக கேன்சர் உட்பட கேன்சர் செல்களை தடுக்கும் ஆந்தோசயாமின், பயோடின் எனப்படும் விட்டமின் பி7, நகங்கள் உடையாமல் வளரவும், தலைமுடி, தோல் ஆரோக்கியமாக இருக்கவும், முகப்பரு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும். இது நுங்கில் அதிகம் உள்ளது.
வியர்க்குரு அதிகமாக இருந்தால் நுங்கை அரைத்து தடவி, 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவினால் வியர்குரு மறைந்து விடும். கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் தாராளமாக நுங்கு சாப்பிடலாம். ரத்தசோகை குறையும். கோடையில் உஷ்ணத்தை குறைத்து, நீர்ச்சத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும். எனவே, அம்மை நோய்கள் வராது.
டாக்டர் ஆர்.மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!