Load Image
Advertisement

நம்மிடமே இருக்கு மருந்து! - கழுநீர்!

அரிசி கழுவிய நீரை, இனிமே கீழே ஊற்றாதீர்கள்.

நம்முடைய உணவுகளில் மிக முக்கியமானது, அரிசி. தினமும் சமைக்கும் போது அரிசி கழுவிய நீரை பயன்படுத்தாமல் வீணாக்கி விடுகிறோம். ஆனால், அரிசி கழுவிய நீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ் மற்றும் அமினோ ஆசிட் நிறைந்துள்ளது. அது நம் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரிதும் துணை புரிகிறது.

அரிசி கழுவிய நீரில், இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன், பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும்; தளர்ந்திருக்கும் சருமத்தை இறுக்கமாக்கும்.

கழுநீரை தினமும், 'பேஷியல் க்ளன்சர்' ஆக பயன்படுத்தலாம். சிறிய துணி அல்லது பஞ்சை, அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து, முகத்தை துடையுங்கள். சிறிது நேரத்தில் தானாக காய்ந்து விடும், கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தினுள் நுழைந்து வினை புரியும்.

வெயிலில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு, சருமம் வறண்டு, விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, அரிசி கழுவிய நீரில், தினமும் முகம் கழுவலாம்.

சீனாவில் உள்ள யாவோ என்ற ஊரின் சிறப்பே, அந்த ஊரில் உள்ள பெண்கள் அனைவருக்கும் நீளமான முடி இருக்கும். கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது.

அவர்களிடம் காரணத்தை கேட்டபோது, 'நாங்கள் தினமும், அரிசி கழுவிய நீரில் தலை குளிக்கிறோம். ஷாம்பூ, சீயக்காய் என்று எதை தேய்த்து தலை குளித்தாலும் கடைசியாக, அரிசி கழுவிய நீரை தலைக்கு ஊற்றிக் கொண்டால் போதும்...' என்றனர்.

அரிசி கழுவிய தண்ணீருடன், கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து, குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு, சரும நோய் வராமல் தடுப்பதுடன், நல்ல துாக்கத்தையும் ஏற்படுத்தும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement