Load Image
Advertisement

கவிதைச்சோலை! - நம் கையில் தான்!

வருகிற சோதனைகள்
நம்மை வாழ வைக்கின்றன
இல்லையெனில்
வீழ வைக்கின்றன!

முளைக்கிற பிரச்னைகள்
நம்மை உருவாக்குகின்றன
இல்லையெனில்
உடைத்துப் போடுகின்றன!

வதைக்கிற வேதனைகள்
நம்மை பலசாலியாக்குகின்றன
இல்லையெனில்
பலியாக்கி விடுகின்றன!

மிரட்டுகிற சங்கடங்கள்
நம்மை மெருகேற்றுகின்றன
இல்லையெனில்
பொலிவிழக்கச் செய்கின்றன!

துரத்துகிற துன்பங்கள்
நம்மை முறுக்கேற்றுகின்றன
இல்லையெனில்
முடக்கிப் போடுகின்றன!

தோன்றுகிற அச்சங்கள்
நம்மை தெளிவாக்குகின்றன
இல்லையெனில்
குழப்பி விடுகின்றன!

உதிக்கிற அழுகைகள்
நம்மை தேற்றுகின்றன
இல்லையெனில்
உருக்கி விடுகின்றன!

நடக்க வேண்டியவை
நேர்மறையா எதிர்மறையா
என்பதெல்லாம்
நம் கையில் தான்!
அ.ப. சங்கர், கடலுார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement