விதை ஈரப்பதம் என்பது விதையானது ஈர்த்து வைத்துள்ள தண்ணீரின் அளவு ஆகும். விதையின் ஈரப்பதம் சவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. விதையின் ஈரப்பதம் ஒரு விதையின் முளைப்புத்திறன், விதைக்கெடுதல், பூச்சி தாக்குதல் மற்றும் அதிகபட்ச சேமிப்பு காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்கிறது.
விதையின் ஈரப்பதம் மிகக்குறைவான நிலையில் இருந்தாலும், மிக அதிகம் இருந்தாலும் விதையின் முளைப்புத்திறன், சேமிப்பு கால அளவு, பூஞ்சானம் மற்றும் பூச்சி தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் சேமித்து வைக்க வேண்டும்.
விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது விதைத்தரத்தை முடிவு செய்யும் முக்கிய காரணியான விதை முளைப்புத்திறன் குறையும்.
நெல் 13 சதவீதம், சிறுதானியங்கள் 12, பயறு வகைகள் 9, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் 9, பருத்தி 10 என விதை பயன்பாட்டிற்கான அதிகபட்ச ஈரப்பத சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவணி, புரட்டாசி பட்டங்களில் விதைப்பு செய்யப்பட்ட சோளம், கம்பு, பாசி, உளுந்து போன்ற பயிர்களின் அறுவடை நடக்கவுள்ளது.
எனவே, விவசாயிகள் விதையினை நன்கு உலர்த்தி விதையின் ஈரப்பதத்தை மேற்குறிப்பிட்ட அளவிற்குள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். விதையின் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை அறிந்து கொள்ள மாவட்ட விதை பரிசோதனை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
சி.சிங்காரலீனா
விதை பரிசோதனை அலுவலர் மதுரை
இரா. இராமசாமி
வேளாண் அலுவலர்
பா.சாய்லெட்சுமி சரண்யா வேளாண் அலுவலர்
99528 88963
விதை ஈரப்பதத்தின் முக்கியத்துவம்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (2)
-
-
விவசாயிகளுக்கு ஒரு பணிவான வேண்டு கோள்: மாறு வேடத்தில் வந்து, தரகர்களிடம் தப்பி, போலி ஓபீசி அதிகாரிகள் யார் இல்லை என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்(முடியுமானால்). பின் அவர்களில் அன்பானவரை அழைத்து சில நல்ல விவசாயிகளுடன் சிறு நல்ல விருந்து வையுங்கள். துளிர் வெத்திலையில், வாசனை பாக்கு, வாசனை சுண்ணாம்பு தடவி நன்றாக அனுபவித்த பின் அன்போடு , அண்ணே, முன்பு " வாருங்கள் விவாசாயம் செய்வோன்னு" ரேடியோவிலே எவ்ளோ நல்ல நிகள்ச்சி வரும். இப்ப அதில்லையே உஈஆரணமா இந்த வெதையிலே (ஏ, ஏளுமலை அந்த தட்டிலே வெதை இருக்கே, அதை தட்டோட கொண்டா) ஈரப்பதம் சரியா
விவசாயிகளுக்கு ஒரு பணிவான வேண்டு கோள்: மாறு வேடத்தில் வந்து, தரகர்களிடம் தப்பி, போலி ஓபீசி அதிகாரிகள் யார் இல்லை என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்(முடியுமானால்). பின் அவர்களில் அன்பானவரை அழைத்து சில நல்ல விவசாயிகளுடன் சிறு நல்ல விருந்து வையுங்கள். துளிர் வெத்திலையில், வாசனை பாக்கு, வாசனை சுண்ணாம்பு தடவி நன்றாக அனுபவித்த பின் அன்போடு , அண்ணே, முன்பு " வாருங்கள் விவாசாயம் செய்வோன்னு" ரேடியோவிலே எவ்ளோ நல்ல நிகள்ச்சி வரும். இப்ப அதில்லையே உஈஆரணமா இந்த வெதையிலே (ஏ, ஏளுமலை அந்த தட்டிலே வெதை இருக்கே, அதை தட்டோட கொண்டா) ஈரப்பதம் சரியா இருக்கான்னு சொல்லுங்கன்னா, உதவி கிடைக்கும். சாப்பாடு தமிளர்களின் விருந்தோம்பல், மாமூல் இல்லையே