மர இலைகள் தாராளமாக கிடைக்கிறது என்பதால் கால்நடைகளுக்கு முழுத் தீவனமாக கொடுக்கக்கூடாது. பசும்புல் வகை தீவனங்களை விட இவற்றில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் முழு தீவனமாக கொடுப்பது நல்லதல்ல.
மர இலைத் தீவனங்களின் நார் சத்தின் செரிமானத்தன்மையும் குறையும். இதனால் மர இலைகளை முழு தீவனமாக சாப்பிடும் கால்நடைகளுக்கு எரிசக்தி பற்றாக்குறை உண்டாகும்.
இதை தவிர்க்க மர இலைகளோடு பசும்புல் வகைகள் மற்றும் வைக்கோல் போன்றவைகளை சேர்த்து தரலாம். கால்நடைகளுக்கு மர இலைகளை மட்டுமே உணவாக கொடுத்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கக்கூடும்.
இதன் விளைவாக உற்பத்தி திறன் குறையலாம். வெள்ளாடுகளுக்கு முழுதீவனமாக கொடுப்பது தவறு. மாடுகளுக்கு அவை சாப்பிடும் தழைத்தீவனத்தில் நாளொன்றுக்கு 15 கிலோ வரை பசும் இலைகள் தேவை. இது தழைத் தீவனத்தில் 30 சதவீத அளவாகும்.
ஆடுகளை பொறுத்தவரை 50 சதவீத அளவில் தீவனத்தில் மர இலைகள் தேவையாக இருப்பதால் தினமும் 3 கிலோ வரை கொடுக்க வேண்டும். மர இலை தீவனத்தில் சுண்ணாம்பு சத்து அதிகமாகவும், பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் உள்ளது. கோதுமை அல்லது அரிசி தவிடு வகைகளை தீவனங்களில் சேர்த்து கொடுத்தால் அதில் உள்ள பாஸ்பரஸ் சத்து இலைகளில்
இருக்கும் சுண்ணாம்பு சத்துடன் கால்நடைகளின் உடம்பில் சேரும். இது கால்நடைகளுக்கு நன்மை அளிக்கும்.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.
94864 69044
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!