ஆடு வளர்ப்பு
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, நாளை இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 044 - 2726 4019
சிறு தானிய பொருட்கள் தயாரிப்பு
செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மதிப்பு கூட்டிய சிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி குறித்து, நாளை மற்றும் நாளை மறு தினம், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பங்கு பெற விரும்புவோர், நேரில் அணுகலாம். தொடர்புக்கு: 044 - 2745 2371
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!