காய், கனிகளை இருப்பு வைப்பது மற்றும் விற்பனை செய்வது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கூர்மவிலாசபுரத்தைச் சேர்ந்த, தனியார் நிறுவன பொது மேலாளர், பி.என்.ஆர்.கார்த்திகேயன் கூறியதாவது:
அரசு தோட்டக்கலை துறை ஒத்துழைப்புடன் காய், கனி இருப்பு வைக்கும் குளிரூட்டும் கிடங்கு வசதி ஏற்படுத்தி உள்ளோம்.
காய்கறி, மா, கொய்யா, திராட்சை உள்ளிட்ட விளை பொருட்களை, விவசாயிகள், குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைக்கலாம்.
எந்தவித ரசாயனம் இன்றி, மாம்பழம், வாழை உள்ளிட்ட பழ வகைகளை பழுக் கவைக் கவும், தனித்தனியாக, பாதுகாக்கப்பட்ட அறைகள் உள்ளன.
மேலும், விவசாயிகளின் விளைப்பொருட்களை, குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பு வைத்து, கூடுதல் விலை உயரும் போது, நேரடியாக விற்பனை செய்யலாம்.
ஏற்றுமதி குறித்து, விவசாயிகளுக்கும் ஆலோசனை வழங்குகிறோம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைந்த கட்டணத் தில், பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: 95001 53325
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!