சாமந்தியில் வருவாய் உண்டு
சாமந்தி பூ சாகுபடி செய்வது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.முருகேசன் கூறியதாவது:
வழக்கமாக, மல்லி சாகுபடி செய்து வந்தேன். அதில், ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. சில நேரம், நோய் தாக்கும்போது, வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மல்லிக்கு பதிலாக, சாமந்தி பூ சாகுபடி செய்தால், ஆண்டிற்கு, 15 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். பிற விவசாயிகள் கொடுத்த ஆலோசனையில், சாமந்தி சாகுபடி செய்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 85319 41587
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!