Load Image
Advertisement

மாடுகள் சினையாகி உள்ளதா

தமிழகத்தில் மாடு சினை பிடித்துள்ளதா, என அறிய கால்நடை மருத்துவமனையை அணுகலாம். அதற்கு பதிலாக வேறு வழியில் அறிய டாக்டர் வீணா என்பவர் கர்நாடக மாநிலத்தில் ஆராய்ச்சி செய்தார். எகிப்து நாட்டின் பிரமிடுகளில் ஓலைச்சுவடி இருக்கும். அதில் பெண்கள் கருவுற்று உள்ளார்களா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது, என எழுதியிருந்ததை வீணா கண்டார். பெண்ணின் சிறு நீரை பார்லி அல்லது கோதுமை விதைகளில் தெளித்து முளைக்கா விட்டால் கருப்பிடிக்கவில்லை என அர்த்தம். நாற்று நன்கு வளர்ந்தால் கருவுற்றிருக்கிறார், என பொருள். நன்கு உயரமாக நாற்று (பார்லி) வளர்ந்தால் பெண் குழந்தை எனவும், கோதுமை நாற்று நன்கு வளர்ந்தால் ஆண் குழந்தை எனவும் கண்டுபிடிக்கலாம்.
இதே முறையை பயன்படுத்தி மாடுகள் சினையாகி உள்ளதா, என ஆராய முடிவு செய்தார். சினைக்கு போட்ட (பசு, எருமை, ஆடு) 25 நாட்கள் கழித்து கண்ணாடி குவளையில் உள்ள கோதுமை, சோளம், பாசிப்பயறு ஆகியவற்றில் எதாவது விதையில் கோமியத்தில் 4 பங்கு நீர் கலந்து, ஊற்றி முளைக்க வைக்க வேண்டும். வேறு குவளையில் சாதாரண தண்ணீர் ஊற்றி முளைக்க வைத்தால், முளைப்புத்திறன், வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கோமியம் கலந்து ஊற்றிய நாற்றின் வளர்ச்சி குறைவாக இருக்கும். இதை 20 சினை மாடுகளுக்கு சோதித்து 100 சதவீதம் உறுதி செய்தார்.

தொடர்புக்கு 95662 53929.

- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement