காதலை சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் பயந்து கொண்டே இருந்தேன் - கவுதம் கார்த்திக்
நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இருவரும் தங்கள் காதலை சமீபத்தில், சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர்
தேவராட்டம் படத்தில் நடித்த போது நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்களுக்குள் காதல் வந்தது. - கவுதம் கார்த்திக்
நான்தான் முதலில் காதலை சொன்னேன். காதலை சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் பயந்து கொண்டே இருந்தேன். - கவுதம் கார்த்திக்
வீட்டில் சொன்ன போது ஏற்றுக் கொண்டனர். மஞ்சிமா என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், என்னை நல்லவனாக மாற்றி விட்டார் என்று அப்பா சொன்னார். - கவுதம் கார்த்திக்
இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமணம் வருகிற 28ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள நடக்கிறது. - கவுதம் கார்த்திக்
தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் நடிக்கிறேன். என் திருமண செய்தி கேட்டு சிம்பு வாழ்த்தினார்
உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்- மஞ்சிமா மோகன்