தஞ்சையின் தனித்துவமிக்க 'தவல வடை'
அரிசி மற்றும் பருப்புகளை நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து, மிளகு, உப்பு, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வடை செய்யும் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
கடுகு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
இரண்டுடன் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மாவு உருண்டையை தட்டையாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு தோசை கல் சூடானதும் அதில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் தடவி பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான 'தவல வடை' தயார்.