Load Image
Advertisement

டீக்குடிக்க சென்ற இன்ஜினீயர் படுகொலை | Two arrested | Engineers murder | covai

தேனி மாவட்டம் பொம்மநாயக்கன்பட்டி வேலாண்டி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் வயது 30. மனைவி, குழந்தை உள்ளனர். இவர் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் மாநகராட்சி குடிநீர் திட்டத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்தார். கார்த்திக், ஊழியர் ஆறுமுகம் ஆகியோர் கோத்தகிரி ரோட்டில் உள்ள பேக்கரியில் டீ குடித்தனர். அதைத் தொடர்ந்து ஆறுமுகம் சிகரெட் புகைத்தனர். அங்கு வந்த அப்துல் ரஹ்மான் மற்றும் முகமது சமீர் ஆகியோர் ஆறுமுகத்திடம் இங்கு சிகரெட் பிடிக்கக்கூடாது வெளியே செல்லுங்கள் என மிரட்டினர். தட்டிக்கேட்ட கார்த்திக், ஆறுமுகம் ஆகியோர் தாக்கப்பட்டனர். அவ்வழியாக போலீசார் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் நான்கு பேரும் பைக்கில் புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் கார்த்திக் ஓட்டி சென்ற பைக்கை அப்துல் ரஹ்மான், முகமது சமீர் ஆகியோர் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கார்த்திக் ரோட்டோரம் இருந்த ஆட்டுக்கல்லில் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அங்கு இறந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் முகமது சமீர், அப்துல் ரஹ்மானை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement