Load Image
Advertisement

திருச்சி மலைக்கோட்டையில் குமாரகணபதி அலங்காரத்தில் மாணிக்க விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று மாணிக்க விநாயகர் மூலவர் மற்றும் உற்சவர் குமாரகணபதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென் கைலாயம் என போற்றி வணங்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலில் உள்ள உச்சி பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் கடந்த 18ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தினசரி மாணிக்க விநாயகர் சன்னதியில் மூலவர் மற்றும் உற்றவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் உற்சவர் உள்பிரகாரங்களில் வலம்வரும் வைபவம் நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று மாணிக்க விநாயகர் மூலவர் மற்றும் உற்சவர் குமாரகணபதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து மாணிக்க விநாயகர்( உற்சவர்) மகா தீபாராதனைக்கு பிறகு உள்பிரகாரங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் விநாயகர் பெருமானை வழிபட்டுச் சென்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement