Load Image
Advertisement

தென்பெண்ணையில் சாக்கடை, தொழிற்சாலை கழிவு விடுவதாக குற்றசாட்டு | Coimbatore | Industrial waste | Farmers strike | Karnataka

கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும், தென்பெண்ணை ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதை கண்டித்து ஓசூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கர்நாடக எல்லை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் இருந்து இஎஸ்ஐ மருத்துவமனை சந்திப்பு பகுதிக்கு கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கர்நாடகா எல்லையை முற்றுகையிட முயன்றனர். சிப்காட் போலீசார் தடுத்து நிறுத்தினர். தரையில் அமர்ந்து கர்நாடகா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement