Load Image
Advertisement

முறைகேடுகளுக்கு முடிவுகட்ட டாஸ்மாக் முடிவு Tasmac| TN Govt|extra money for alcohol

டாஸ்மாக் மதுக்கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ஊழியர்கள் 10 ரூபாய் அதிகம் வாங்குவது தொடர்கதையாக இருக்கிறது. கூடுதலாக வசூலாகும் பணத்தில் உயர் அதிகாரிகள் வரை கமிஷன் செல்கிறது. இந்த முறைகேட்டை தடுக்க அரசு முயற்சித்தது. மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியருக்கு அபராதம், இடமாற்றம் போன்ற தண்டனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதும் முறைகேடுகளை தடுக்க முடியவில்லை. இதனால், கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியரை சஸ்பெண்ட் செய்ய அரசு உத்தரவிட்டது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மதுவுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்கிறது. கூடுதல் பணம் வசூலிப்பது பற்றி தகவல் கிடைத்தால், அந்த ஊழியரின் பின்னணியை விசாரித்து ஏற்கனவே முறைகேடு செய்திருந்தால் டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுவுக்கு அதிக பணம் வசூலிப்பது தடுக்கப்படும் என டாஸ்மாக் கருதுகிறது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement