Load Image
Advertisement

வசூலிக்க வழி தெரியாமல் விழிபிதுங்கும் வாரிய அதிகாரிகள் TN housing board rent arrears

ஈரோடு, சம்பத்நகர், பெரியார் நகரில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வாடகை அடுக்குமாடி வீடுகள் உள்ளன. அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் குறைந்த வாடகைக்கு பல ஆண்டுகளாக குடியிருந்தனர். இதில் பலர் ஓய்வு மற்றும் பணி மாறுதல் பெற்றபோதும் வீட்டை காலி செய்யாமல் உள் வாடகைக்கு விட்டு சம்பாதித்தனர். பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட வாரியம் முடிவு செய்தது. அங்கு தங்கியிருந்தவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியது. அனைவரும் உடனே காலி செய்து சென்றுவிட்டனர். ஆனால், இப்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களை தவிர, மற்றவர்கள் பல ஆண்டுகளாக வாடகை கட்டாமலே இருந்துள்ளனர். அதுவே பல கோடி ரூபாய் இருக்கும் எனத்தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement