Load Image
Advertisement

12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கம் | சமயபுரம் மாரியம்மன் தங்க தேர்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்த தங்க தேர் இழுப்பது வழக்கம். கோயில் உள்பிரகாரம், ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகளால் 2011 முதல் தங்கத் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு பொறுப்பேற்றதும் 2021ல் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு தேரோட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தனர். இருப்பினும் பணிகள் முழுவதும் முடியாததால் பக்தர்கள் சேவை தொடங்காமல் இருந்தது. மேலும் 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக தங்கத் தேர் இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement