Load Image
Advertisement

தேர்வில் தோல்வியுற்ற மாணனுக்கு ஊக்கமளித்த திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின் உள் நோயாளிகளின் குறைகளை கேட்டு அறிந்தார்.அப்போது கரடிவாவி பகுதியைச் சேர்ந்த மாணவன் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருவதாக கலெக்டரிடம் தெரிவித்தனர். அந்த மாணவனை சந்தித்த கலெக்டர், தானும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் ஆனதாகவும் ஆனாலும் விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் நன்றாக படித்து தேர்வுகளை எழுதி இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருப்பதாக மாணவனை ஊக்கப்படுத்தினார். இது அங்கு இருந்தவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement