Load Image
Advertisement

போலீஸ் ஸ்டேஷன்கள் அதிகரிப்பு டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

கோவையில் பல்வேறு காவல்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை மாநகரில் கவுண்டம்பாளையம், போத்தனூர், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 இடங்களில் புதிய காவல் நிலையங்களை திறந்து வைக்கிறார். அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு 1574 காவல் நிலையங்கள் தற்போது உள்ளன என்றார். கோவை மாநகர காவல்துறையை விரிவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் தற்போது கோவை மாநகர காவல் துறையுடன் இணைய உள்ளன. என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement