Load Image
Advertisement

விடிந்ததும் குடித்துவிட்டு அட்டூழியம் | Mylapore | Dinamalar

சென்னை மயிலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ் பஸ் ஸ்டாப்பில் புதன்கிழமை காலை 8.00 மணிக்கு பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். அங்கு நின்றிருந்த ஏழுமலை என்ற பயணியை, போதை ஆசாமி ஒருவர் தொடர்ந்து வம்பிழுத்தார். விடிஞ்சும் விடியாம போதையா? என ஏழுமலை கேட்டார். ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி, ஏழுமலையை கல்லால் தாக்கினார். ஏழுமலையின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. அவ்வழியே பைக்கில் சென்ற சப் இன்ஸ்பெக்டர் வந்து விசாரித்தார். ஏழுமலையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மயிலாப்பூர் போலீசார் வருவதற்குள், போதை ஆசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். போலீசார் வழக்கு பதிந்து போதை ஆசாமியை தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement