Load Image
Advertisement

பொறுப்பற்ற முடிவு மாணவர்களை பாதிக்கும் | சீமான் கண்டனம்

தமிழகத்தில் ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தாங்க முடியாத கடும் வெயில், கொரோனா தொற்றுப் பரவலும் நாளுக்குநாள் அதிகரிக்கும் சூழலில், தமிழக அரசு அவசர அவசரமாக பள்ளிகளைத் திறந்து மாணவர்களை வாட்டி வதைக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து தமிழக அரசு எடுத்திருக்கும் பொறுப்பற்ற இந்த முடிவு, மாணவர்களின் உடல், மன நலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பள்ளிகள் திறக்கும் முடிவை மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement