Load Image
Advertisement

தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றுள்ளார். டமாசெக், செம்ப்கார்ப் கேப்பிட்டா லேண்ட் (Temasek, Sembcorp, CapitaLand) நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகளை எடுத்துக்கூறி, முதலீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார். டமாசெக் நிறுவனம் தமிழகத்தில் ஏற்கனவே காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்துள்ளது. கடல் சார்ந்த காற்றாலைகள் நிறுவுதல், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அரசு உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்களில் முதலீடு செய்யவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement