Load Image
Advertisement

செப்டம்பர் 30க்கு பிறகும் ₹2000 நோட்டு செல்லும் | Shaktikanta Das | RBI

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் 30 வரை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றது. ஒருவர் ஒருநாளுக்கு அதிகபட்சம் 20 ஆயிரத்துக்கான 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். எந்த ஆவணமும் கொடுக்க தேவையில்லை. இதே போல 2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை. செப்டம்பர் 30க்கு பிறகும் 2000 நோட்டுகள் செல்லுபடியாகும். சட்டப்பூர்வமான கரன்சி நோட்டாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறினார். 2013-14ல் கூட 2005க்கு முன் அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது. இப்போது பெரும்பாலான 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வரும் என எதிர்பார்க்கிறோம். அதை வைத்து அடுத்த முடிவு எடுப்போம். செப்டம்பர் 30க்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. வங்கியில் பணம் மாற்றவும், டெபாசிட் செய்யவும் போதுமான அவகாசம் உள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டாம் என சக்திகாந்ததாஸ் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement