Load Image
Advertisement

367வது நாளாக பெட்ரோல் ₹102.63க்கும், டீசல் 94.24க்கும் விற்பனை

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் காலை நிர்ணயம் செய்கின்றன. கோவிட் தொற்று, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், 2021, 2022ல் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை, 110 ரூபாயை தாண்டியது. டீசல் விலை உயர்வால் வாகன வாடகை உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. தமிழகத்தில், 2022 மே, 21ல் பெட்ரோல், 110.85 ரூபாய்க்கும்; டீசல், 100.94 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்றிரவு, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை, 8 ரூபாயும்; டீசல் மீதான கலால் வரியை, 6 ரூபாயும் குறைத்தது. அடுத்த நாள் தமிழகத்தில் பெட்ரோல், 102.63 ரூபாய்க்கும், டீசல், 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement