Load Image
Advertisement

தினமலர் செய்தி எதிரொலியால் கூட்டுறவுத்துறை உத்தரவு!

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, 19ம் தேதி இரவு அறிவித்தது. செப்டம்பர் 30ம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும், மாற்றி கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2016ல் திரும்ப பெறப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில், கூட்டுறவு வங்கிகளில் பல முறைகேடுகள் நடந்தன. 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதிலும் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நோட்டு மாற்ற வருவோரிடம், பான் கார்டு விவரத்தை பெறுமாறு, கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், நுாறு நாள் வேலை திட்ட அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களில், ஏதேனும் ஒன்றின் நகலை பெறுமாறு, கூட்டுறவு வங்கி மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement