Load Image
Advertisement

750 லட்டுகள் கணக்கில் வராதது கண்டுபிடிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் சார்பில் தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாகவும், கூடுதலாக பெற விரும்பினால் ஒரு லட்டு ஐம்பது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே இருக்கும் மையத்தில் பூந்தி தயாரித்து கன்வேயர் பெல்ட் மூலம் கோயிலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு லட்டு பிரசாதம் தயார் செய்து ஒரு டிரேவில் 50 லட்டுகள் வீதம் வைத்து விற்பனை கவுன்ட்டருக்கு கொண்டு வரப்படுகிறது. 15 டிரேவில் இருந்த 750 லட்டுகளை கணக்கில் காட்டாமல் முறைகேடாக விற்பனை செய்ததை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தேவஸ்தான ஊழியர்களுடன், ஒப்பந்த ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரிக்கின்றனர். பல மாதங்களாக நடக்கும் இந்த முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement