Load Image
Advertisement

சிசிடிவி பார்த்து கெஜ்ரிவால் நடவடிக்கை | Delhi | Gvernment Bus | CCTV | Kejiriwal

டில்லியில் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி உள்ளது. ஆனால், பல பஸ் டிரைவர்கள் பெண்களை பார்த்தாலே, வண்டியை நிறுத்துவது இல்லை என்பது போன்ற புகார்களும் அரசுக்கு வந்தவண்ணம் உள்ளன. ஒரு பஸ் நிறுத்தத்தில், மூன்று பெண்கள் காத்திருந்தனர். ஒரு அரசு பஸ், நிறுத்தத்தை தாண்டி நிற்கிறது. பெண்கள் ஓடிச்சென்று ஏற முயன்றனர். ஆனால், டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டிச் சென்று விட்டார். புகார் முதல்வர் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு போனது. சிசிடிவி வீடியோவை பார்த்தார். பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத காரணத்துக்காக பஸ் டிரைவரை சஸ்பெண்ட் செய்து கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி இருக்கிறது. பெண்களை பார்த்தாலும் சில டிரைவர்கள் பஸ்சை நிறுத்துவதில்லை. இதை அரசு பொறுத்துக்கொள்ளாது என கெஜ்ரிவால் ட்விட்டரில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement