Load Image
Advertisement

தீக்காயத்துடன் 2 பெண்கள் அட்மிட் | Sivakasi | firecracker accident | Dinamalar

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டியில் கடற்கரை என்பவரது பட்டாசு ஆலை உள்ளது. அங்கு புஷ்வானத்துக்கு ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வின் காரணமாக தீப்பற்றி பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் குமரேசன், சுந்தர்ராஜன், இருளாயி, அய்யம்மாள் பலத்த தீக்காயம் அடைந்தனர். சிவகாசி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட 35 வயதான குமரேசன், 27 வயதான சுந்தர்ராஜன் இறந்தனர். இருளாயி, அய்யம்மாள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையில் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement