Load Image
Advertisement

மழையால் விளைச்சல் பாதித்து விலை எகிறியது

வட கோவை பகுதியில் உள்ள பூமார்க்கெட்டுக்கு நீலகிரி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பூக்கள் விற்பனைக்கு வரும். கடந்த 2 மாதங்களாக, மல்லிகை விலை கிலோ 300 ரூபாயை தாண்டவில்லை. மற்ற பூக்களும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டன. தமிழகத்தில் பல பகுதிகளில் பெய்து வரும் மழையால், பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கோவை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 300க்கு விற்ற மல்லிகை 600 ரூபாயாக உயர்வுகண்டது. சாமந்தி 380 ரூபாய்க்கும், முல்லை 240க்கும் ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 320 ரூபாய்க்கும் சம்பங்கி 80 ரூபாய்க்கும் விற்பனையானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement