Load Image
Advertisement

கொடைக்கானலில் டிராபிக் ஜாம் பல மணி நேரம் பயணிகள் தவிப்பு

கொடைக்கானலில் சீசன் களைகட்டுகிறது. ஏராளமான வாகனங்கள் வருவதால், பெருமாள்மலை டு சில்வர் ஃபால்ஸ் செக்போஸ்ட் இடையே இரண்டு நாட்களாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் நகர முடியாமல் அணி வகுத்து நின்றன. அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், பூம்பாறை, மன்னவனூரில் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தனியார் பஸ்கள் டிரிப்புகளை கட் செய்தன. உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல தாமதம் ஆனது. டிராஃபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். எனினும் பல மணி நேரம் மக்கள் காத்திருக்க வேண்டியதானது. லேக் சாலையில் வழக்கம்போல் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. குதிரை சவாரி, சைக்கிளிங் செல்ல முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டூரிஸ்ட்டுகள் வலியுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement