Load Image
Advertisement

காக்னிசன்ட் வளாகம் கட்ட ரூ.12 கோடி லஞ்சம் வாங்கினர்... லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

அமெரிக்காவை சேர்ந்த காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்துக்கு இந்தியாவில் 10 இடங்களில் கிளை உள்ளது. சென்னையில் சோழிங்கநல்லூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் KITS கேம்பஸ் என்ற பெயரில் மிகப்பெரிய காக்னிசன்ட் கிளை செயல்படுகிறது. இந்த கட்டடத்தை எல் அன்ட் டி நிறுவனம் கட்டிக் கொடுத்தது. இந்த கட்டடத்தை கட்ட அனுமதி கேட்டு சிஎம்டிஏவிடம் காக்னிசன்ட் விண்ணப்பித்தது. அதிகாரிகள் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. பிறகு, 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து கட்டட அனுமதி பெறப்பட்டது. இந்த விவரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்தது. காக்னிசண்ட் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தமிழக அரசுக்கு தெரிவித்தனர். இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக, காக்னிசண்ட், L&T நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் என 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement