Load Image
Advertisement

அதிமுக நிர்வாகி வெட்டி கொலை ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். வயது 30. அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, கஞ்சா விற்பனை, அடிதடி தொடர்பான வழக்குகள் உள்ளன. வீட்டின் அருகே நண்பர்கள் 4 பேருடன் மது குடித்தார். மது காலியானதால், வாங்கி வரும்படி 2 பேரை அனுப்பினார். மற்ற 2 பேர் உடனிருந்தனர். மது வாங்க சென்றவர்கள் திரும்பிவந்து பார்த்தபோது, நாகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனிருந்த இருவரையும் காணவில்லை. போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போதையில் ஏற்பட்ட தகராறில் நாகராஜை சக நண்பர்கள் 2 பேரும் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என போலீசார் கருதினர். அவர்களை தேடும் பணி நடக்கிறது. அதே பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா மீதும் போலீசுக்கு சந்தேகம் உள்ளது. காரணம், மாமூல் வாங்கும் பணத்தை நாகராஜிடம் கொடுத்து வந்துள்ளார் விஷ்வா. அது தொடர்பாக 2 பேருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்தது. கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரே இந்த கொலையை செய்திருக்கலாம். கொலை கும்பலை பார்த்து மற்ற 2 நண்பர்களும் தெறித்து ஓடி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement