Load Image
Advertisement

யாஷிகா ஆனந்த்தை கைது செய்ய செங்கல்பட்டு கோர்ட் உத்தரவு! ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்

சென்னையை சேர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த் வயது 22. 2021 ஜூலை 25ம் தேதி ஹைதராபாத்தை சேர்ந்த தோழி வள்ளிஷெட்டியுடன் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார் யாஷிகா. காரை யாஷிகா தான் ஓட்டினார். மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் சாலை தடுப்பில் கார் மோதி வள்ளிஷெட்டி இறந்தார். காயமடைந்த யாஷிகா மீது போலீஸ் வழக்கு போட்டது. ஜாமினில் வெளியே வந்த அவர், செங்கல்பட்டு கோர்ட்டில் நடக்கும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்தது கோர்ட். அவரை கைது செய்து ஏப்ரல் 25ம் தேதி ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. யாஷிகாவை கைது செய்யும் வேலை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement