Load Image
Advertisement

மீனாட்சி கோயிலில் சீரமைப்பு பணிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் வீரவசந்தராய மண்டபம் உள்ளது. 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் மண்டபம் முழுவதும் சேதம் அடைந்தது. மறு சீரமைப்புக்காக தமிழக அரசு, 18.10 கோடி ரூபாய் ஒதுக்கி கொடுத்தது. மண்டபத்தில் 23 அடி உயர 16 கல் தூண்களை சீரமைக்க ராசிபுரத்தில் இருந்து கற்கள் கொண்டுவந்தனர். கோயிலுக்கு சொந்தமான கூடல் செங்குளத்தில், திருப்பூர் ஸ்தபதி வேல்முருகன் தலைமையில் 20 பேர் குழு, முழு வீச்சில் தூண்களை பழைமை மாறாமல் வடிவமைத்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement