Load Image
Advertisement

மக்கள் முகம் சுளிக்கும் வகையில் தெரு முழுக்க பேனர் வேண்டாம்.... RS பாரதி அறிக்கை

மக்களுக்கு இடைஞ்சல் தரும்விதமாக, பேனர் கட்அவுட் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினரை 2019ல் ஸ்டாலின் எச்சரித்திருந்தார். அதையும் மீறி, திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் விழாவில் முகம் சுளிக்கும் வகையில் பேனர், கட் அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதாக தினமலர் செய்தி வெளியிட்டது. இது, திமுக தலைமை கவனத்துக்கு சென்றது. இனி பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என ஸ்டாலின் ஒப்புதலோடு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிவுரையை கடைபிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலை நாட்ட வேண்டும்; யாராவது மீறியதாக தலைமைக்கு புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரஸ் பாரதி எச்சரித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement