Load Image
Advertisement

பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை

சட்டசபை நிகழ்வுகளை பள்ளி மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அரசியல் விழிப்புணர்வு பெற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்முறையாக திருவள்ளுவர் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் 20- பேர் புதுச்சேரி சட்டசபைக்கு வந்தனர். அவர்களுக்கு சபாநாயகர் செல்வம் நினைவு பரிசு வழங்கினார். கூட்டத்தொடர் நடக்கும் மைய மண்டபத்தில் பார்வையாளர் அறையில் மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பார்த்து தெரிந்துகொண்டனர். அப்போது, மாணவிகள், தங்கள் பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement