Load Image
Advertisement

ராசா தம்பி நிலத்தை அபகரித்தார் ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பெரம்பலூர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா. சலவை தொழிலாளி. அதே ஊரில் அவர் குடும்பத்துக்கு 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, திமுக எம்.பி. ஆ.ராசாவின் தம்பி ராமச்சந்திரன் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டார்; எதிர்த்து கேட்டால் அரசியல் பலத்தை வைத்து மிரட்டுகிறார் என சுப்பையா குடும்பத்தினர் கூறுகின்றனர். திங்கள் காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சுப்பையா குடும்பத்தினர் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். ராசா தம்பி மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என சுப்பையா குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, கலெக்டரிடம் மனு கொடுக்க அவர்களை போலீசார் அழைத்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement