Load Image
Advertisement

கடலில் பேனா சின்னம் வேண்டாம் சுப்ரீம் கோர்ட்டில் மீனவர்கள் மனு

சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நல்லதம்பி, சென்னை ராயபுரம் தங்கம், கன்னியாகுமரி பாகன் ஆகிய மீனவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். 32 மீனவ கிராமங்களில் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலையும், மீனவர்களையும் பாதிக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement