Load Image
Advertisement

ஜால்ரா என கிண்டல் அடித்த அதிமுக அப்செட் ஆன செல்வப்பெருந்தகை

அனைத்து கட்சி சட்டசபை தலைவர்களுக்கும் நேற்று பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார். கடந்த காலங்களில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இப்போது அதிகம் பிடிக்கின்றனர் என்றார். உடனே அதிமுகவினர் 'ஜால்ரா' என அவரை கிண்டல் அடித்தனர். பேசவிடாமல் கோஷம் எழுப்பினர். செல்வப்பெருந்தகை அதிருப்தி அடைந்தார். இதை சபாநாயகர் அனுமதிக்க கூடாது என்றார். குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, திட்டமிட்டு அ.தி.மு.க.வை தாக்கி பேசுவதால், இங்கே இருந்து குரல் வருகிறது என்றார். உடனே தொகுதி பிரச்னையை பேச துவங்கினார் செல்வப்பெருந்தகை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement