Load Image
Advertisement

கொதிக்கும் எண்ணையை ஊற்றி ஓட்டலை சூறையாடிய 5 பேர் கைது

சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி, வயது 59. பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். போதையில் கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித், ஹரிஹரன் ஆகிய இருவரும் ஓசியில் ப்ரைட் ரைஸ் கேட்டு தகராறு செய்தனர். ஜெயமணி தரமுடியாது என்றார். ஆத்திரத்துடன் கிளம்பிய இருவரும், நண்பர்கள் மூன்று பேரை அழைத்து வந்து கடையை சூறையாடினர். கடாயில் சூடாக இருந்த எண்ணையை தூக்கி ஜெயமணி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பினர். Breath காயம் அடைந்த நிலையில் ஜெயமணி, அவரது மகன் மணிகண்டன் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகளை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ்,அஜித்,பிரவீன்,சிவகுமார், ஹரிஹரன் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement