Load Image
Advertisement

₹2 கோடி அரசு நிலம் 14 ஆண்டுக்கு பின் மீட்பு

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் வெள்ளை ஊரணி என்ற நீர்பிடிப்பு பகுதி உள்ளது. நான்கரை ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அதில் 1.78 ஏக்கர் நிலத்தை வடிவேல் என்பவர் ஆக்கிரமித்து இருந்தார். அது, தனக்கு சொந்தமான இடம் என கூறி 2008ல் மணப்பாறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 14 ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதி பாண்டி தீர்ப்பு வழங்கினார். அது அரசுக்கு சொந்தமான நிலம் என்பது உறுதி செய்யப்பட்டதால் வடிவேலுவின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 2 கோடி மதிப்புள்ள அந்த அரசு நிலத்தை மீட்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement