Load Image
Advertisement

இந்தியாவை தலை நிமிர செய்தவர் மகான் அரவிந்தர் - பிரதமர் மோடி பெருமிதம்

புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி சார்பில் ஸ்ரீ அரவிந்தர் நினைவு தபால் தலை, நாணயம் வெளியீட்டு விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வெளியிட்டார். மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகான் அரவிந்தரின் நினைவாக நாணயம், அஞ்சல் தலை வெளியிட்டிருப்பது இந்தியாவில் ஒரு புதிய சக்தியை உருவாக்கியுள்ளது என்றார். அனைவரையும் ஒருங்கிணைத்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர் அரவிந்தர். ஆன்மிகம் கலந்த சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலை நிமிர செய்தவர் என்று பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement