Load Image
Advertisement

கடல் அட்டை கடத்தல் மன்னன் ஜாகிர் மீது குண்டாஸ் பாய்ந்தது

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் வயது 52, திருட்டுத்தனமாக கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தார். அவரை சமீபத்தில் வனத்துறை கைது செய்தது. இது அவர் மீது பதிவான 11வது கடத்தல் வழக்கு என்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வனத்துறை பரிந்துரை செய்தது. இதை ஏற்று உசேனை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் சிறையில் இருந்த உசேன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். உசேன் கடல் அட்டை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டை கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படும் முதல் நபர் ஜாகிர் உசேன்தான்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement