Load Image
Advertisement

கோட்டைக்கு வாங்க மந்திரிகளே! ஸ்டாலின் போட்ட திடீர் உத்தரவு

தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் அடிக்கடி ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். ஆனால் அமைச்சர்கள் தலைமை செயலகம் வருவது குறைவு. முதல்வர் வெளியூர் சென்றால் யாரும் அந்த பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அமைச்சர் அலுவலகங்களில் கோப்புகள் தேங்கி கிடக்கின்றன. பணிகள் தாமதமாகிறது என புகார் வந்தது. அமைச்சர்களை ஸ்டாலின் கண்காணிக்க துவங்கினார். சில தினங்களுக்கு முன் முதல்வர் அலுவலகத்தில் இருந்து, அமைச்சர்கள் அறைக்கு போன் போட்டார். பலர் தலைமை செயலகம் வராதது தெரிந்தது. விரக்தி அடைந்த ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டார். திங்கள் முதல் வியாழன் வரை கண்டிப்பாக தலைமைச் செயலகம் வர வேண்டும் என்றார். மற்ற நாட்களில் அவரவர் விருப்பம் என கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement