Load Image
Advertisement

தேசிய ஒருமைப்பாட்டை விட காங்கிரசுக்கு தேர்தல்தான் முக்கியம்

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். நிரபராதிகள் என்பதற்காக 7 பேரும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் காட்டும் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. முன்னதாக, பேரறிவாளன் விடுதலை ஆனபோது, முதல்வர் ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார். அதை கண்டிக்க காங்கிரசுக்கு முதுகெலும்பு இல்லை. இன்னமும் திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தேசிய ஒருமைப்பாட்டை விட தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றிகள் முக்கியமாகிவிட்டது. அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள பொறுப்பையும், இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிடக்கூடாது என்பதையும் முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு தமிழகத்தை புகழிடம் ஆக்கிவிட வேண்டாம் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement