Load Image
Advertisement

குண்டும் குழியுமான சாலை ஆசிரியர் உயிரை குடித்தது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் வயது 45. வாழைப்பந்தல் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆரணி சென்றுவிட்டு, வீட்டுக்கு ஸ்கூட்டியில் திரும்பி கொண்டிருந்தார். ஆரணி பாளையம் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. அதுமட்டுமல்லாமல் குண்டும் குழியுமாக இருந்ததால் பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இதில், துளசிராமன் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாமாக இறந்தார். ஆரணி டவுன் போலீசார், லாரி டிரைவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement