Load Image
Advertisement

மாநகராட்சி, கோயில் நிர்வாகம் ஈகோவால் பக்தர்கள் அவதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் நலன் கருதி சித்திரை வீதிகளில் 4 இ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டன. மின் கட்டணத்தை கோயில் நிர்வாகம் செலுத்தாததால் இ டாய்லெட்டுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கழிவறைகளை பராமரிக்க வேண்டியது மாநகராட்சிதான்; அவர்களே மின் கட்டணத்தை செலுத்தட்டும் என கோயில் தரப்பு சொல்கிறது. கழிவறைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டோம்; இனி அவர்கள் பொறுப்புதான் என மாநகராட்சி தரப்பு கூறுகிறது. இதனால், 3 மாதமாக இ டாய்லெட்டுகள் செயல்படாமல் வீணாகி வருகிறது. பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நிதி அமைச்சர் தியாகராஜன் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலில் இ டாய்லெட்டுகள் செயல்படாமல் இருக்கலாமா? அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement