Load Image
Advertisement

பாஜ டு ரஜினி டு தனி கட்சி மீண்டும் பாஜவில் அர்ஜூனமூர்த்தி

தமிழக பாஜவின் முன்னாள் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் அர்ஜூனமூர்த்தி. ரஜினி கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த போது பாஜவில் இருந்து விலகினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கிய போது , இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புது கட்சியை அர்ஜூனமூர்த்தி தொடங்கினார். கடந்த 2021ம் சட்டசபை தேர்தலில் களம் இறங்கினார். ரோபோ சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார். வெற்றி பெற்றால், 10 வகுப்பு வரை விவசாய பாடம் ; மாணவர்களுக்கு இலவச பெட்ரோல் கார்டு போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அதன்பிறகு காரணம் சொல்லாமல் போட்டியிடாமல் விலகினார். இந்த நிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜவில் அர்ஜூனமூர்த்தி இணைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement