Load Image
Advertisement

அமெரிக்காவில் இருப்பது காஞ்சிபுரம் புத்தர் சிலையா

காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் ஆதிகேசவ பெருமாள் கோயில் வளாகத்தில் அமர்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலை 2003ல் காணவில்லை என காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சிலை அமெரிக்காவில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆற்பாக்கம் சென்றனர். மக்கள், முன்னாள் ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர்களிடம் விசாரித்தனர். சிலை இருந்ததற்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். முழு தகவல்களையும் சேகரித்து ஆய்வு செய்த பின்னரே உண்மை தெரியும். இங்கிருந்த சிலை அமெரிக்காவில் இருப்பது உறுதியானால் உடனே மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement