Load Image
Advertisement

சென்னை ஏர்போர்ட்டில் ஸ்லீப்பிங் பாட் வசதி

சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக ஸ்லீப்பிங் பாட் (sleeping Pod) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஏர்போர்ட் இயக்குனர் ஷரத் குமார் இந்த வசதியை தொடங்கி வைத்தார். ஏர்போர்ட்டில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் ஹோட்டல்களுக்கு செல்வதற்கு பதிலாக ஸ்லீப்பிங் பாடில் தங்கலாம். ஸ்லீப்பிங் பாடில் தங்கியிருக்கும் நேரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆனால் கட்டண விவரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ரீடிங் லைட்கள், சார்ஜிங் பிளக்குகள், லக்கேஜ் இடம், படுக்கை வசதிகள் உள்ளன. ஒரு பெரியவர் மற்றும் 12 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை தங்குவதற்கான இடவசதி ஸ்லீப்பிங் பாடில் உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என ஏர்போர்ட் இயக்குனர் ஷரத்குமார் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement